10ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய 51 வயது மூதாட்டி - பின்னணியில் சுவாரஸ்யம்..!

x

கரூரை சேர்ந்த ராகிலா பானு என்ற 51 வயது மூதாட்டி, சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். சத்துணவு அமைப்பாளர் பணிக்காக பத்தாம் வகுப்பு தேர்வெழுத முடிவு செய்த அவர், சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சி பெற்றார். தற்போது நடைபெறும் துணைத்தேர்வில் மீதமுள்ள 3 பாடங்களுக்கும் ராகிலா பானு தேர்வு எழுதி வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, மகன் சாகுல் அமீது பாடங்கள் சொல்லிக் கொடுத்து உதவியதாக, ராகிலா பானு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்