சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு | Chennai HC

x

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த ஐந்து பேர், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். உத்தரவின் பேரில், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, 5 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்