"40கி. உணவு ,கட்டு காட்டாக பிளாஸ்டிக்" - ஸ்வீட் கடையில் ஷாக் ஆன அதிகாரிகள்..

x

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மருத்துவர் ராகவன் தலைமையிலான அதிகாரிகள் தென்கரைப் பகுதியில் உள்ள தேநீர் கடை, இனிப்பகங்கள், மளிகை கடை, பழக்கடை உள்ளிட்ட கடைகளை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பிறகு,

காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 40 கிலோ அளவிலான உணவு பொருட்கள், மேலும் தடை செய்யப்பட்ட ஐந்து கிலோ நெகிழிப்பையை பறிமுதல் செய்தனர். பின்னர்,2000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்