4 ரூம் தெலங்கானாவில்..4 ரூம் மகாராஷ்டிராவில் - ஒரே வீடு 2 மாநிலங்களில் உள்ள அதிசயம்

x

மகாராஷ்டிர மாநில எல்லை மற்றும் தெலங்கானா மாநில எல்லையான சந்த்ரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது உத்தம் பவார் மற்றும் சந்திர பவாரின் வீடு...

நடுவே சாக்பீஸால் ஒரு கோடு போடப்பட்டுள்ள நிலையில், அதில் 4 அறைகள் மகாராஷ்டிராவிற்குள்ளும், மீதி 4 அறைகள் தெலங்கானாவிற்குள்ளும் வருகின்றன...

1969ம் ஆண்டு இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லை பிரச்சினை தீர்க்கப்பட்ட போது, பவார் குடும்பத்தின் நிலம் இரு மாநிலங்களிலும் பிரிக்கப்பட்டது...

அதில் இருந்த வீடும் இரண்டாகப் பிரிந்தது...

இருப்பினும், இரு மாநிலங்களிலும் சொத்து வரி செலுத்தி வருவதால் இவர்கள் இன்று வரை எந்த பிரச்சனையும் சந்திக்கவில்லை.

2 மாநில நலத் திட்டங்களையும் அனுபவிக்கும் பவார் குடும்பம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவின் பதிவு எண்களைக் கொண்ட சொந்த வாகனங்களையும் கூட வைத்துள்ளனர்...

அதாவது, சமையலறை தெலங்கானாவிற்குள் உள்ள நிலையில், தெலங்கானாவில் சாப்பிட்டு விட்டு, மகாராஷ்டிராவிற்கு உறங்கச் செல்கின்றனர் இந்த பவார் குடும்பத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்