IPL -ஐ விட்டு வெளியேறியது 3-வது அணி

x

ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ராஜஸ்தான், 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியது. ராஜஸ்தான் அணி 14 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், மீதமுள்ள போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்