34 செம்மறி ஆடுகளை பறிகொடுத்து நிற்கும் மூதாட்டி

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 34 செம்மறி ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவணம் பெருங்குடி கிராமத்தில் வசித்து வரும் ஆரோக்கியசாமி-மதலைமேரி தம்பதியினர், கடந்த ஏழு ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் அவர்கள் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது 34 ஆடுகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இது குறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்