"ஐஐடி-யில் 33 பேர்.. என்ஐடி-யில் 24 பேர்.." - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் 33 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மதுரை எம்.பி. சு வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில்,கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் 33 தற்கொலை வழக்குகளும், என்ஐடி கல்வி நிறுவனங்களில் 24 தற்கொலை வழக்குகளும் ஐஏஎஸ் கல்வி நிறுவனங்களில் நான்கு தற்கொலை வழக்குகளும் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்