ஊரை சுத்தி காட்டுகிறேன் என கூறி 3 பள்ளி மாணவர்களை கடத்திய ஆசாமி

x

ஊரை சுத்தி காட்டுகிறேன் என கூறி 3 பள்ளி மாணவர்களை கடத்திய ஆசாமி


திண்டுக்கல் அருகே பள்ளி முடிந்து ஆட்டோவுக்காக காத்திருந்த மாணவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


சின்னாளபட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள், பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் திடீரென மாயமாகினர். இதனால், மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவர்களை தேடிய நிலையில், போலீசிலும் புகார் அளித்தனர். இதனிடையே, மாயமான மாணவர்கள் மூவரும் கொடைரோடு டோல்கேட் அருகே அழுது கொண்டு நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர், மீட்டு விசாரிக்கையில், பள்ளி முடிந்து ஆட்டோவுக்காக காத்திருந்த மாணவர்களை இருசக்கர வாகனத்தை வந்த நபர் ஒருவர், ஊரை சுத்தி காட்டுகிறேன் என அழைத்து சென்றதாகவும், சந்தேகமடைந்து மாணவர்கள் அழுததால் கொடைரோடு அருகே இறக்கிவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், மாணவர்களை அழைத்து சென்ற நபர் யார்? கடத்தல் முயற்சியா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்