எமர்ஜென்சி வார்ட் சென்ற 3 பேர்.. லிப்டின் உள்ளே சிக்கிய கொடூரம்.. குழந்தை குரலில் கேட்ட கதறல் சத்தம்

x

காரைக்கால் அரசு மருத்துவமனையில், எமெர்ஜென்சி பிரிவின் லிப்ட்டில் குழந்தை உட்பட மூவர் சிக்கிக்கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், லிப்ட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. இந்தநிலையில் ஒரு குழந்தை உட்பட 3 பேர், எமர்ஜென்சி வார்டிலுள்ள லிப்டில் 2 ஆம் தளத்திலிருந்து முதல் தளத்திற்கு வந்துள்ளனர். அப்போது மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், லிப்ட் நடுவிலேயே நின்றுள்ளது. ஜெனரேட்டர் இயங்க தாமதமான நிலையில், உள்ளே சிக்கி கொண்டவர்களின் உறவினர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை ஊழியர்கள், நீண்ட போராட்டத்துக்குப்பின் லிப்டின் கதவை இரும்பு ராடு கொண்டு உடைத்து, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை, மருத்துவமனை ஊழியர்கள் தடுத்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்