ஏமனில் இருந்து மதுரை வந்த 3 பேர் - போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை

x

ஏமன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய மூவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மூன்று பேர் ஏமன் நாட்டில் பணிபுரிந்து பின்னர் துபாய் வழியாக விமானம் மூலம் மதுரை வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூவரும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்