சொல் பேச்சு கேட்காத புதுமண ஜோடி.. இறுதியில் பரிதாபமாக பலியான சோகம்

x

தேனி அருகே திருமணமான புதுமண தம்பதியினர் உள்பட 3 பேர் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பெரியாத்து கோம்பை நீர்வீழ்ச்சியில், தேனியை சேர்ந்த புதுமணத் தம்பதிகள், 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் குளிக்க சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரித்த நிலையில், அதையும் மீறி அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட சுழலில் சிக்கி புதுமணத் தம்பதிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உடன்சென்ற 14 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்


Next Story

மேலும் செய்திகள்