3 பேரின் உயிரை குடித்த கள்ள சாராயம்..15-க்கும் மேற்பட்டோர் சீரியஸ் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

x

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளசாராயம் குடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமரன். இவர் விற்பனை செய்த கள்ளசாராயத்தை, எக்கியர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குடித்ததாக தெரிகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது


Next Story

மேலும் செய்திகள்