"3 மாதம்.. கலங்கடித்த கல்யாண வாக்குறுதி" - தீயாய் பரவும் லிவ்இன் காதலன் பேசிய ஆடியோ

x

காரைக்காலில், முதல் திருமணத்தை மறைத்து 4 ஆண்டுகள் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி தன்னை ஏமாற்றியதாக வாலிபர் மீது இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விவாகரத்து பெற்று 2வது திருமணம் செய்ய முயற்சி செய்து வந்த இளம் பெண்ணை காரைக்காலை சேர்ந்த மரி லூர்து ராஜ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும்... இதனை தொடர்ந்து இருவரும் 4 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லூர்து ராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது அதன் பின்னர்தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து இளம் பெண் போலீஸில் புகார் அளித்த நிலையில், வாபஸ் வாங்குமாறு மரி லூர்து ராஜ் வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில் அது தீபாவளி துப்பாக்கி என தெரியவந்தது. இந்த நிலையில் மூன்று மாதம் அமைதியாக இரு திருமணம் செய்து கொள்கிறேன் என மரி லூர்து ராஜ் மறுபடியும் வாக்குறுதி அளித்த ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்