பெங்களூரில் தரையிறங்க முடியாமல் தவித்த 3 விமானங்கள்

x

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நிலவிய மோசமான வானிலையால் 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து 112 பயணிகளுடன் பெங்களூரு புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டன. இதே போல், கொல்கத்தா, புனேவிலிருந்து புறப்பட்ட விமானங்களும் பெங்களூரில் தரையிறங்க முடியாததால், சென்னை திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டன. அப்போது, பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற வசதிகளை விமான நிறுவன ஊழியர்கள் செய்து கொடுத்தனர். வானிலை சீரடைந்ததும் விமானங்கள் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்