இத்தாலி மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி - ஆறுகளில் கரை உடைந்ததால் மக்கள் பீதி

x

இத்தாலியில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டின் வடக்கே எமிலியா பகுதியில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 14 ஆறுகளில் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை ரப்பர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காப்பாற்றும் பணிகளில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்