கோவையில் 2-வது நாளாக நீடிக்கும் ஐ.டி.சோதனை

x

கோவையில், வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அதே பகுதியில் உள்ள அவரது ரியல் எஸ்டேட் அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரவிந்த் என்பவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும், சவுரிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூரில் அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்திலும் சோதனை நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனை நாளையும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்