ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது

x

எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 5 படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். மீனவர்கள் நெடுந்திவுக்கும் காரைநகர் பகுதிக்கும் இடையே மீன் பிடித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த இலங்கை கடல் படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்த‌தாக கூறி 23 மீனவர்களை கைது செய்த‌தோடு, அவர்களுடைய ஐந்து மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேஷன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், இன்னும் நாடு திரும்பாத நிலையில், ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்