இறந்து 2 ஆண்டுகள்... கணவன் உயிருடன் வந்த அதிசயம்? காணாமல் போன சொத்துக்கள்... அதிர்ச்சியில் மனைவி

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் காஞ்சனா ரவி வர்மா. இவர்களுக்கு ஆந்திரா மாநிலம் குப்பம் பி. இ.எஸ் மருத்துவ கல்லூரி அருகே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 2 காலி இடங்கள் மற்றும் ஒரு வீடு உள்ளது. காஞ்சனாவின் கணவர் ரவி வர்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் காஞ்சனா தமது சொத்துக்களை விற்று பதிவு செய்ய வந்த போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. காஞ்சனா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு உயிரிழந்து விட்டதாகவும், இறப்பு சான்றிதழை தயார் செய்து ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன காஞ்சனாவின் கணவர் வந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் வேறு ஒருவருக்கு இடத்தை விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காஞ்சனா மற்றும் உறவினர்கள், 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த கணவர் 6 மாதங்களுக்கு முன் எப்படி உயிருடன் வந்து பத்திர பதிவு செய்து தர முடியும் என கூறி, சார் பதிவாளர் வெங்கட சுப்பையாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆவணங்கள் அனைத்தையும் சரி பார்த்து இதை உறுதி செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என சார் பதிவாளர் கேட்டு கொண்டநிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்