'தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்'... தோல்வி பயத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி

x

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் திருத்தியமலை அரசு பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் வர்ஷா கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் தனது பிளஸ்-2 படிப்பை பாதியிலே நிறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை வீட்டில் இருந்த படியே படித்து எதிர்கொண்டுள்ளார். பொதுத் தேர்வுகள் முடிந்த போதும், மாணவி தேர்வு பயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், கடந்த 4 ஆம் தேதி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வர்ஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்