இரவில் தனியாக நின்றிருந்த +2 மாணவி - கடவுள் போல வந்த எஸ்.பி. - வேலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

x

வேலூரில் தன்னந்தனியாக நின்ற பள்ளி மாணவியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டில் அழைத்து சென்று விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் பாகாயம் காவல் நிலைய பகுதிகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், ஓட்டேரி ஏரி சாலை சந்திப்பு பகுதியில் தனியாக நின்ற பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது சினேகா என்ற அந்த மாணவி, அழைத்து செல்ல யாரும் வராததால் அங்கு காத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ராஜேஷ்கண்ணன், மாணவியை தனது காரில் அழைத்து சென்று அவரது வீட்டில் இறக்கிவிட்டார்.

பின்னர் மாணவியின் பெற்றோரிடம், மாணவிகளை மாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்