கஞ்சா விற்பனையோடு வீட்டில் செடி வளர்த்த 2 வடமாநில தொழிலாளர்கள் - விசாரணையில் போலீசாரால் கைது..

x

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிக்கு, மாணவர்கள் அடிக்கடி செல்வதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது 2 வடமாநில தொழிலாளர்கள், வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்