தண்டவாளத்தில் கிடந்த 2 உடல்கள்.. நண்பர்களா ? எதிரிகளா ? விபத்தா ? தற்கொலையா ?

x

திருப்பரங்குன்றம், ரயில்வே சுரங்கப்பாதை அருகே 2 இளைஞர்களின் உடல்கள் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 30 வயது மதிக்கத் தக்க அந்த இரண்டு இளைஞர்களின் முகங்களும் சிதைந்த நிலையில் உள்ளன. மேலும், ஒருவரது கையில் மகேஸ்வரி என்று பச்சை குத்தப்பட்டிருப்பதும், இருவரும் மதுரையிலிருந்து நெல்லை செல்ல ரயில் டிக்கெட் எடுத்திருப்பதும் தெரியவந்தது. இருவரும் ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்