வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 1ம் வகுப்பு மாணவன்..! - கதிகலங்க செய்யும் பேரதிர்ச்சி..!

x

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது...

விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் 6வயது சிறுவன் வகுப்பறைக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது துப்பாக்கியால் சுட்டுள்ளான்... இதில் ஆசிரியர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்... சக மாணவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகவில்லை. கைத்துப்பாக்கியுடன் இருந்த சிறுவனை போலீசார் காவலில் வைத்துள்ளனர்... இது எதேச்சையாக நடந்த விபத்தல்ல என்று உறுதிபட தெரிவித்த காவலர்கள், சிறுவனுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்று தீர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்