முதியவரை அடித்து கொன்ற 18வயது இளைஞர்கள்.. அதிர்ச்சி காட்சிகள்..இதுக்கு கொலையா..? | Pudhucherry

x

புதுச்சேரியில் 60 ரூபாய் பணத்துக்காக முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முதியவர் முத்துக்குமரன், வெள்ளாளர் வீதியில் தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த பெரியகடை போலீசார், உடற்கூராய்வு அறிக்கை அடிப்படையில் அதனை ​​கொலை வழக்காக மாற்றினர். முதியவர் கொலையான பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், மூன்று இளைஞர்கள் முதியவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. வாகன எண்ணை வைத்து விசாரணையை துரிதப்படுத்திய தனிப்படை போலீசார், வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி பாரதி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார், திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகிய மூவரையம் கைது செய்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது. நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று மது போதையில் திரும்பியதும், சிகரெட்டிற்காக முதியவரிடமிருந்த 60 ரூபாயை பறிக்க முயன்றபோது அவர் தடுத்ததால் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்