16 வயது சிறுமிக்கு கட்டாய கல்யாணம்.. தந்தை மற்றும் காதலன் கைது

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காதலனுடன் சிறுமி ஓட்டம் பிடித்த சம்பவத்தில், சிறுமியின் தந்தை மற்றும் காதலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரனின் மகள் தீபா, 10ம் வகுப்பு படித்துள்ள நிலையில், திருமண வயதை எட்டாத அவரை மேகநாதன் என்பவருக்கு, அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.

இருப்பினும், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அதே கிராமத்தைச் சேர்ந்த சுக்கிரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியின் தந்தை மற்றும் காதலன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்