15 மாவட்டங்கள்.. 12,645 பேர்.. டெல்டாவில் முதல் களம்.. அதிரப்போகும் திருச்சி

x

திருச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

திமுகவில் மொத்தம் உள்ள 72 மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலாவதாக டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் இன்று மாலை திருச்சியில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட திமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 15 மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மொத்தம் 12 ஆயிரத்து 645 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் புறப்பட்டு விமானம் மூலம் காலை 11 மணியளவில் திருச்சி சென்றடைகிறார்.


Next Story

மேலும் செய்திகள்