இசை நிகழ்ச்சி கூட்டத்தில் மூச்சுத்திணறி கொத்து கொத்தாக ரசிகர்கள் மரணம் - அடுத்த பயங்கரம்

x

இசை நிகழ்ச்சி கூட்டத்தில் மூச்சுத்திணறி கொத்து கொத்தாக ரசிகர்கள் மரணம் - உலகை உலுக்கிய அடுத்த பயங்கரம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தியாகிகள் அரங்கத்தில் காங்கோ பாடகர் ஃபாலி இபுபாவின் இசை நிகழ்ச்சிக்காக 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர்... அரங்கத்திற்கு வெளியேயும் நீண்ட வரிசைகள் பலர் காத்துக்கிடந்தனர்... அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 காவலர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்