சீர்வரிசையாக 101 சவரன் நகை...மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கறிஞர் - கொதிக்க கொதிக்க வெந்நீரால்..

x

முதல் திருமணத்தை மறைத்து, பணத்திற்காக 2வது திருமணம் செய்து மனைவியை சித்திரவதை செய்து வந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு வியாசர்பாடியை சேர்ந்த நிசார் அகமது என்ற வழக்கறிஞருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மணமகளுக்கு சீர்வரிசையாக 101 சவரன் நகை தரப்பட்டது. திருமணம் ஆனதில் இருந்தே, நிசார் அகமது தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சீர்வரிசையாக தரப்பட்ட 101 சவரன் நகையில், சுமார் 40 சவரன் நகைகளை நிசார் அகமது தனது சொந்த செலவிற்காக பயன்படுத்தியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்து மனைவி விசாரித்தபோது, நிசார் அகமதுவுக்கு, ஏற்கனவே மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நிசார் அகமது சுடுநீரை மனைவியின் முகற்றில் ஊற்றியதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், நிசார் அகமதுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது தெரியவந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்