பெரு நாட்டில் 10 உயிர்களை பலிவாங்கிய பேருந்து விபத்து - பலரது நிலைமை கவலைக்கிடம்...

x

பெரு நாட்டில் 10 உயிர்களை பலிவாங்கிய பேருந்து விபத்து - பலரது நிலைமை கவலைக்கிடம்...

பெரு நாட்டில், சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.

ஹூவான்கோ நகரத்திலிருந்து, 76 பயணிகளுடன் லிமா நகரத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதிகாலையில், சாலையில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்