திமுகவில் இணைந்த 600க்கும் மேற்பட்ட பாஜகவினர்... சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்

x

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்ததுள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில், வீரப்பன் சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி மனை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது...

பாஜகவில் இருந்து விலகிய 600க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நேரு உள்ளிட்டோர் துண்டு அணிவித்து வரவேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, அதிமுக ஒரே அணியாக இருந்து ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதை திமுக வெல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்