ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணம்... அதிரடி காட்டிய பறக்கும் படையினர்

Update: 2024-03-25 02:47 GMT

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணம்... அதிரடி காட்டிய பறக்கும் படையினர்

#flyingsquad #nagercoil #trichy #elections2024 #thanthitv

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், 13 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட 2 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 1 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு ஆண்டிபட்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்