Nagai Fisherman Arrest | காலில் விலங்கோடு நாகை மீனவர்கள்.. இலங்கை அதிகாரிகள் செய்த வேலை..
இலங்கை மருத்துவமனையில் நாகை மீனவர்களுக்கு, காலில் விலங்கு போட்டு சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த 3ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் விடுவித்தது. ஆனால் தற்போது இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மீனவர்களுக்கு, காலில் விலங்கு போடப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சை ஆகியுள்ளது. தேசத்துரோக வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் போல், மீனவர்கள் காலில் விலங்கு போடபட்டது வேதனையை அளித்துள்ளது.