அணுசக்தி திட்டம் தொடர்பான ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈரான் பக்கம் திருப்பியிருக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்கா படைகள் குவிப்பு, இரு நாடுகள் இடையே வார்த்தை போர் என்ற பதற்றமான சூழலில் ஒரு பாசிட்டிவான நகர்வாக இந்த பேச்சுவார்த்தை பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெற வேண்டியது இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது, அது ஏன்?