Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.12.2025) | 1PM Headlines | ThanthiTV
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு எதிரொலி... வெளி மாவட்டத்தின் சொந்த ஊர் செல்வதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது...
பொங்கல் பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு செல்ல 40 மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஒரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வால்வோ சொகுசு பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்... 34 கோடி ரூபாய் செலவில் 20 சொகுசு பேருந்துகளின் சேவை தொடங்கி உள்ளது....
தந்தி டிவியின் ஸ்பெஷல் ரிப்போர்ட்டில் செய்தி வெளியானதன் எதிரொலி ... கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி இடையே ஈரடுக்கு பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது...
பெரியாரின் நினைவுநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மலர்துவி மரியாதை செலுத்தினார்... பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல், தின்று செரிக்கவும் முடியாமல் பகைவர்கள் திண்டாடுகின்றனர் என முதல்வர் விமர்சித்துள்ளார்....
100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு... சென்னை, விழுப்புரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...
தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் (blue bird) செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது...ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள், எல்.வி.எம்-3 ராக்கெட் வாயிலாக வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது...
அமெரிக்க செயற்கைகோளுடன் LVM3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்... விண்வெளியில் இந்தியா தொடர்ந்து உயரப் பறக்கிறது என, பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்...
LVM3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்காக விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டினார்... வணிக ரீதியான 34 நாடுகளை சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்...