Today Headlines | மாலை 6 மணி தலைப்புச்செய்திகள் (21.09.2025) 6 PM Headlines | ThanthiTV
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்...
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்...
- ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று இரவு 8 மணிக்கு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத உள்ளன...
- தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது...
- தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது...
- தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பல மொழிகள் கற்பிக்கப்படும் நிலையில், 3வது மொழியில் மட்டும் என்ன பிரச்சினை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்...
- ஆர்.டி.இ. நிதியில் மாநில அரசுதான் முதன்மையான பங்களிப்பாளர் என நீதிமன்றம் கூறியிருப்பதாகவும், தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்...
- பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்டவற்றில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்க “சென்னை ஒன்“ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது...
- சென்னை ஒன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்...