Thiruparankundram Arrest | தி.குன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்த போலீஸார்

Update: 2025-12-22 03:25 GMT

Thiruparankundram Arrest | தி.குன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கைது செய்த போலீஸார்

பலத்த எதிர்ப்புக்கு இடையே சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம். பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரிய ரத வீதியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி, மலை மீதுள்ள தர்காவில் நேற்றிரவு கொடியேற்றப்பட்டது. மலை மீதுள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் கொடியேற்ற கோட்டாட்சியர் அனுமதி அளித்திருந்த நிலையில் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை விடுவிக்க கோரி, பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்