மருத்துவர் வீட்டில் மெகா கைவரிசை...கொள்ளையனுக்கு பஞ்சாபில் காத்திருந்த அதிர்ச்சி..!

Update: 2024-01-27 10:55 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பிளசன்ட் நகரில் வசித்து வருபவர் கலைகுமார். நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவரான இவரின் வீட்டில், கடந்த 7 ஆம் தேதி 90 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, கொள்ளையர் கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பது தெரியவர, அவரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கொள்ளையர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார், முத்து கிருஷ்ணனை சுற்றி வளைத்து கைது செய்தனர். கொள்ளையரிடம் இருந்து 90 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்