திருத்தணி அருகே மலை தேனீக்கள் கடித்து 100 நாள் பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழவேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கால்வாய் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த மலைத்தேனிக்கள் அவர்களை கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.