கள்ளழகர் எழுந்தருளிய மண்டபத்தில் காலில் ஷூவுடன் நின்ற காவல் ஆய்வாளர்
கள்ளழகர் எழுந்தருளிய மண்டபத்தில், காவல் ஆய்வாளர் ஷூ அணிந்தவாறு சாமி அருகே நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய போது, பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர், காலில் ஷூ அணிந்தபடி சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...