சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்தேரோட்டம் - குவிந்த பக்தர்கள்

Update: 2025-08-10 11:36 GMT

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித் திருவிழாவில், பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டத்தில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக முத்தங்கி சேவையில் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் தேரடி வீதிகளில் தேர் உலா வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்