சூட்கேஸில் கிடந்த பெண் சடலம் - சிக்கிய 2 குற்றவாளி - அம்பலமான டாட்டூ பின்னணி

Update: 2024-03-25 12:42 GMT

கடந்த வாரம், ஏற்காடு மலைப் பாதையை ஒட்டிய வனப்பகுதியில், சூட்கேசில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர். சூட்கேசில் இருந்து ரசீதை வைத்து போலீசார் விசாணை நடத்தியபோது, கோவையில் உள்ள கடையில் சூட்கேஸ் வாங்கியது தெரியவந்தது. தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மன்னார்குடியை சேர்ந்த நடராஜன் மற்றும் அவரது நண்பர் கனவளவன் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். இதுதொடர்பாக இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, கொலை செய்யப்பட்ட பெண், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. சுப்புலட்சுமியும், திருமணமான நடராஜனும் கத்தாரில் பணியாற்றியபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் சொந்த ஊர் திரும்பியபோது, கணவரிடம் கத்தார் செல்வதாக பொய் சொல்லி, 5 லட்சம் ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுப்புலட்சுமி, கோவைக்கு சென்று அங்கு தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து நடராஜனுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, சுப்புலட்சுமியின் பெயரை கையில் டாட்டூவாக வரைந்திருந்த ​நடராஜன், அதனை அழித்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த நடராஜன் சுப்புலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்