மைசூரில் இருந்து ராமேஸ்வரம் வந்த பக்தருக்கு நொடியில் நேர்ந்த சோகம் | Ramanathapuram | Devotee
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த பக்தருக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்திருந்த நடராஜன் என்பவர் குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர் திசையில் வந்த கர்நாடக டெம்போ வாகனம் எதிர்பாராத விதமாக நடராஜன் மீது மோதியதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் அப்பகுதியே பரபரப்பானது.