கடும் பதற்றத்தில் இருமாநில எல்லைசிதறி -ஓடிய விவசாயிகள் -தீவிரமகா கண்காணிக்கப்படும் சமூக வலைதளங்கள்

Update: 2024-02-13 11:12 GMT

மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. பஞ்சாப்-ஹரியானா இடையே உள்ள ஷம்பு எல்லையில் அவர்கள், சாலை தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. விவசாயிகள் சிதறி ஓடியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் காவல்துறை 144 தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவது கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்