பழனி கோயிலில் பக்தர்களுக்கு ரூ.500 ஃபைன் போட்ட நிர்வாகம்

Update: 2024-01-15 10:20 GMT

பழனி தண்டாயுதபாணி கோயிலில் அனுமதியின்றி செல்போன் எடுத்து சென்றவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டாயுதபாணி கோயிலில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் சிலர் அனுமதியின்றி செல்போனை எடுத்து சென்றனர். அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த கோயில்நிர்வாகம், ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், அபராதத்தை செலுத்தி செல்போனை மீட்க, பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ஏற்கனவே பாதையாத்திரையாக கால் கடுக்க நடந்து வந்த பக்தர்கள், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்