ஒரே பெயரில் அருகருகே தேர்வு மையங்கள் எக்ஸாம்க்கு வந்த மாணவர்களுக்கு குழப்பம் கோவையில் நடத்த நீட் பரிதாபங்கள்

Update: 2024-05-05 13:15 GMT

கோவையில் நீட் தேர்வு மையத்தை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டதால், தேர்வு எழுத கேரள மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், நேஷனல் மாடல் சிபிஎஸ்சி பள்ளியிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களுக்கு தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள், தங்கள் மையங்களை கண்டறிவதில் குழப்பம் ஏற்பட்டு மாறி மாறி சென்று வந்தனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சம்ருதா என்ற மாணவி, வேறு தேர்வு மையத்துக்கு சென்று விட்டு மீண்டும் அதே மையத்துக்கு வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த பெற்றோர், கதவுகளை திறக்குமாறு கோஷமிட்டும், காலதாமதமாகி விட்டதாக கூறி, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அந்த மாணவிக்கு அனுமதி மறுத்தனர். இதனால் அந்த மாணவி, தனது பெற்றோருடன் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்