Murugan Temple Kanyakumari | பாரம்பரிய முறைப்படி முருகனுக்கு காவடி எடுத்த அரசு அதிகாரிகள்

Update: 2025-12-13 02:33 GMT

பாரம்பரிய முறைப்படி காவடி எடுத்த அரசு அதிகாரிகள். கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் வேளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்காக பாரம்பரிய முறைப்படி அரசு அதிகாரிகள் காவடி எடுத்தனர். தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தலா 2 புஷ்பக்காவடிகள், தலா ஒரு பால்குடம் எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பத்மநாபபுரம் நீதிபதிகள், தக்கலை டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று அதிகாரிகள் சார்பில் காவடி எடுப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்