கண் தெரியாத பெண்ணுடன் உல்லாசம்... தங்க கம்மல் கேட்ட ரகசிய காதலி - கண்ணெதிரே ஜோடி நடத்திய அட்டகாசம்

Update: 2024-03-16 02:32 GMT

உசிலம்பட்டியை சேர்ந்தவர் கவிதா. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், கணவரை இழந்து மதுரை சக்கிமங்கலம் அருகேயுள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் வசித்து வந்தார். கடந்த 12 ஆம் தேதி கவிதாவை கொலை செய்த மர்மநபர்கள், அவரின் கை, கால்களை கயிறால் கட்டி பெண் அணிந்திருந்த 10 சவரன் நகை மற்றும் செல்போனை திருடிச் சென்றனர். இதில், கவிதாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவானந்தம் என்ற இளைஞரும், கலையரசி என்ற பெண்ணும் திடீரென மாயமானது போலீசாரை சந்தேகமடைய செய்தது. விசாரணையில், கணவரை இழந்து தனியே வசித்து வந்த கலையரசியுடன் சிவானந்தம் குடும்பம் நடத்தி வந்ததும், தனக்கு தங்க நகைகள் வேண்டுமெனக் கேட்ட காதலிக்காக... பார்வையற்ற மாற்றத்திறனாளியான கவிதாவை இளைஞர் தன் காதலியுடன் சேர்ந்து கொன்று நகைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த கலையரசியையும், இளைஞர் சிவனாந்தத்தையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்