லாரி மீது பின்னால் பயங்கரமாக மோதிய கார்... நொடியில் பலியான த.வா.க மாவட்ட செயலாளர்

Update: 2024-02-04 10:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயலாலர் உயிரிழந்தார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் சபரி, காரில் தனது ஆதரவாளர்கள் உடன் சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். மேலுமலை வனப்பகுதி அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சபரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்