காலேஜில் நினைக்காத நேரத்தில் வந்த மரணம் - துடித்து பிரிந்த மாணவர் உயிர்

Update: 2024-05-02 01:55 GMT

திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வந்தார். விடுமுறை தினமான நேற்று மைதானத்தில் விளையாடிய அவர், விடுதியின் கழிவறைக்குச் சென்றபோது திடீரென அங்கு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் அவருக்கு தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக கூறியதால், மாணவரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, மாணவர் தனுஷின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்கவில்லை என்று மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்