தகாத உறவை கைவிடுமாறு வற்புறுத்திய உறவினர் காதலனுடன் சேர்ந்து பெண் நிகழ்த்திய கொடூரம்..

Update: 2024-04-06 02:28 GMT

காஞ்சிபுரம் அருகே.. தகாத உறவை கைவிடுமாறு வற்புறுத்திய உறவினரை காதலனுடன் சேர்ந்து கொன்று பெண் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட்டை சேர்ந்தவர் மோகன் புஜக்கர். இவர் தன் உறவினரான சோனியா என்பவருடன் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். அங்கு, சோனியாவிற்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுசாந்தா பர்மன் என்பவருக்குமிடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த புஜக்கர், இருவரையும் கண்டித்த நிலையில், சம்பவத்தன்று இருவரையும் தன் வீட்டிற்குள் வைத்து பார்த்து ஆத்திரமடைந்திருக்கிறார். இதில், சோனியாவிற்கும் புஜக்கருக்குமிடையே தகராறாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பானதில், புஜக்கரை பர்மன் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இதில், புஜக்கர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொண்டதாக சோனியா நடகமாடிய நிலையில், போலீசாரின் விசாரணையல் அனைத்தும் அம்பலமாகியிருக்கிறது. இந்நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்